திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சங்கீதாஸ் ஹோட்டல் அருகே இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தனியார் பஸ்சும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தனியார் பஸ்ஸின் டிரைவர் மற்றும் அதே பஸ்ஸில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

 இந்தக் கோர விபத்து குறித்து சாலையில் சென்ற பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் ஆகியோர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் விபத்து நடந்த பகுதிக்கு வந்த போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சென்னையிலிருந்து கம்பம் நோக்கி சென்ற கிருஷ்ணா ட்ராவல்ஸ்சுக்கு சொந்தமான தனியார் பஸ்சுக்கு முன்னால் பைபாஸ் சாலையில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *