திருச்சி மாவட்டம், சமயபுரம் நான்கு ரோடு அருகே உள்ள மதுபான கடையில் மது குடிக்க வந்த நான்கு பேர் காசு கொடுக்காமல் கடனுக்கு மதுபாட்டில் கேட்டு கடை உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளனர்.மேலும் உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மது பாட்டில் தராததால் 4 பேரும் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அறிவாளால் பாலகிருஷ்ணனை வெட்டியும், பீர் பாட்டிலில் தாக்கி விட்டு தப்பியோடினர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திருச்சி சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் போலீசார் விசாரணையில் சமயபுரம் ஒத்தக்கடையை சேர்ந்த ஷாமு உள்ளிட்ட நான்கு பேர் என முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *