திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அப்துல்சலாம் மற்றும் நோபல்சந்திரபோஸ் ஆகியோர் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

அம்மனுவில் திருவெறும்பூர் அணைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜலெட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் சத்தியாதேவி ஆகியோர்கள் வழக்கறிஞர்களை கண்ணியக்குறைவாகவும் நடத்துவது, மேலும் ஒருமையில் பேசுவதை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று காலை வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுஜித் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *