திருச்சி திண்டுக்கல்ரோடு வ.உ.சி தெருவில் கடந்த 15.09.22 – ம்தேதி டிபன் கடையில் வேலை செய்தவரிடம் , கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .1500 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , பெரியமிளகு பாறையை சேர்ந்த குற்றவாளி கோபால் ( எ ) குஞ்சு கோபால் வயது 27 என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மேலும் விசாரணையில் ரவுடி கோபால் ( எ ) குஞ்சு கோபால் மீது திருச்சி மாநகரில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனை , மற்றும் பணம் , நகையை பறித்ததாக 5 வழக்குகளும் , திருச்சி மாவட்ட திருவெறும்பூரில் கொலை வழக்கு உட்பட் 8 வழக்குகளும் , திண்டுக்கல் மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகள் உட்பட மொத்தம் 20 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது . எனவே , குற்றவாளி கோபால் ( எ ) குஞ்சு கோபால் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் , திருட்டு மற்றும் கத்தியை காட்டி பணம் பறிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து ,

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி கோபால் ( எ ) குஞ்சு கோபால் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *