திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு மொட்ட கோபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி காமாட்சி(32). இவர் அப்பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டு முடிந்த நிலையில் பணம் கட்டிய உறுப்பினர்கள் சீட்டு பணம் கேட்டு அவர் வீட்டுக்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென காமாட்சி தனது குழந்தைகள் தருண்(9), யாஷிகா(6) ஆகியோருடன் மாயமாகியுள்ளார். இது குறித்து அவரின் கணவர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பெயரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து காமாட்சியை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *