இஸ்லாமிய முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பண்டிகையும் ஒருவித அர்த்தம் தோற்றுவித்து இருக்கின்றன. இறைக்கட்டளைக்கு பணிந்து பெற்ற மகனையே பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் தியாகம் இத்திருநாளில் நினைவு கூறப்படுகிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இத்திருநாள் இருக்கிறது. ஏழை, எளியோர், தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த நிறைவில் மனம் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான நாளாகவும் இப்பண்டிகை நாள் இருக்கிறது.

பெருநாளை ‘பக்ரீத்’ என்கிறோம். ‘பக்ரி’ என்றால் ‘ஆடு’ பொருள் தருகிறது. இவ்வகையில் ஆட்டை அறுத்து குர்பானி தரப்படுவதால், இந்த பெருநாளை ‘பக்ரீத்’ என்றழைப்பது வழக்கமாகி இருக்கிறது.

இறைவன் அளித்த உயிர், உடமை, நேரம் என அனைத்தையும் எச்சூழலிலும் தியாகம் செய்கிற உன்னத உணர்வின் ஆணி வேராகவே ‘குர்பானி’ விளங்குகிறது.இத்தியாக பெருநாளை உலகம் முழுவதும் இஸ்லாமியர் தொழுகையுடன் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மரக்கடையில் உள்ள அரசு சையது முர்துஷா பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பக்ரீத் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. மாநில பொருளாளர் சபியுலா கான், மேற்கு மாவட்ட தலைவர் பயாஸ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *