பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் முழு கரும்புடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், புத்தூர் நால்ரோடு, ஆழ்வார்தோப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம், முழு கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், பகுதி செயலாளர்கள் இளங்கோ, போட்டோ கமால், மாமன்ற உறுப்பினர்கள் விஜயா ஜெயராஜ் மற்றும் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *