திருச்சி லால்குடி வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மகன் யுவராஜா என்பவருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது கடந்த மாதம் 2-ம் தேதி POCSO சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாலதி என்பவர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவ்வழக்கிற்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மாலதி யுவராஜாவிடம் ரூபாய் 5000 லஞ்சமாக பணம் கேட்டுள்ளார். மேலும் லஞ்ச பணத்தை நேற்று காலை அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில் யுவராஜிடமிருந்து இன்ஸ்பெக்டர் மாலதி 5000 லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் இன்ஸ்பெக்டர் மாலதி மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *