திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 3175 பயனாளிகளுக்கு விவசாயிகளுக்கு ரூ.11கோடியே 15 லட்சம் திட்ட மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் இதே போல் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த 59-நபர்களுக்கு பட்டாவும், 12 நபர்களுக்கு 50-ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன், அப்துல்சமது, மேயர் அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *