அதிமுக கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைக்க வந்த மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் பொன்னாடை போற்றி வரவேற்றார்.

திருச்சி அதிமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் வழக்கறிஞர்கள் ஏற்பாட்டில், திருச்சி நீதிமன்றம், வ.உ.சி சிலை அருகே கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட பழ வகைகளும், இளநீர், ஜூஸ் வகைகள், எலுமிச்சை பழச்சாறு, நீர்மோர் ஆகியவற்றை அதிமுக மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சசிகுமார், இணைச் செயலாளர் முல்லை சுரேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *