திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி (smt moorthi) என்பவர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு பொறுப்பேற்ற முதல் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசு பணிகளை இவர் எடுத்து பிரித்து கொடுப்பார் என தகவல் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருப்பதாக தகவல் வெளியானது இந்நிலையில் இரவு 7 மணிக்கு ஈஸ்வரமூர்த்தி வீட்டில் உள்ளே நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.. தேர்தல் பணம் பட்டுவாடா தொடர்பாக பணம் இவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *