புதுக்கோட்டை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்த தீபன்ராஜ் இவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 9ஆம் தேதி வலிப்பு நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து நேற்று காலை கைதி தீபன்ராஜ் தப்பி ஓடினார். இதுகுறித்து சிறை துறை காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தப்பி ஓடிய கைதி தீபன்ராஜை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய கைதி தீபன்ராஜ் திருப்பூரில் காவலர்கள் கைது செய்தனர்.

கைதி தப்பி ஓடியது தொடர்பாக மருத்துவமனையில் காவல் பணியில் அஜாக்கிரதையாக இருந்த சிறைத்துறை காவலர்கள் பிரகாஷ், கோவிந்தராஜன், வினோத்குமார் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *