திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

 திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தது திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டமானது இன்று காலை நடைபெற்றது. இதில் இன்று ஆதிகாலை உபநாச்சியர்கள், புருஷோத்தமன் பெருமாளுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் செய்து பின் திருத்தேரில் 7 மணியளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதனைத்தொடர்ந்து காலை 8:15 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்தோடு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை சுற்றி வலம் வந்தனர்.தேரோட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி ரகுபதி ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், சாந்தி மற்றும் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *