திருச்சி திண்டுக்கல் சாலை ராம்ஜி நகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக “தமிழ்” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல திரை பட பாடல் ஆசிரியர் கவிஞர் யுக பாரதி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் யுகபாரதி கூறுகையில்:- தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் நிகழ்வையும் மற்றும் சமூக நலன் மற்றும் சமூக அக்கறையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்தும் விதமாக பல பாடல்களை திரைப்படங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமியில் பயிலும் மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் நன்கு படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கூறி தனது பாராட்டுகளை வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்