திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.இவ்வாறு கடத்தி வரும் தங்கத்தினை அவ்வபோது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் செல்ஃபி ஸ்டிக்கில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.27 லட்சத்து 98 ஆயிரத்து 189 மதிப்புள்ள 503 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *