திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று மாவட்ட நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல். சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 403 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக சென்று பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் .அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .ஏழுமலை. உதவி ஆணையர்(கலால்) ரெங்கசாமி, உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *