திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள நடைபாதையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக ஜி.எச் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இட வந்த போலீசார் இறந்த கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த கிடந்த மூதாட்டி இந்த நடைபாதையில் நடந்து செல்வோரிடம் பிச்சை கேட்டு வாழ்ந்து வந்தவர் என்பது முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்