திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று மாலை அருள்மிகு செவ்வந்தி விநாயகர் அருள்மிகு தாயுமான சுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு, மாலை 6.00 மணிக்கு அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் ஆகியவை கலந்து ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீப திருவிழாவின் ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு பா சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள் திரு கருணாநிதி, திரு கலைச்செல்வி திரு ஸ்ரீதர் திரு கோவிந்தராஜு மற்றும் திருக்கோயில் உதவிய ஆணையர் செயல் அலுவலர் திரு கா அருட் செல்வன் மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் , பேஸ்கார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.
