நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே விவேகானந்தா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்ப்பில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

அனைவரும் தங்களது வாகனங்ளை சுத்தம் செய்து வாழை தோரனங்களால் அலங்கரித்து தங்களது குடும்பத்தினருடன் பூஜை செய்து வழிபட்டனர். இந்நிகழ்வில் சங்க தலைவர் மதியழகன், துணை தலைவர் ரவிகுமார், செயலாளர் தில்லை தியாகராஜன், பொருளாளர் ஆறுமுகம் உள்பட சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி தமிழ் நாடு ஹோட்டல் எதிரே உள்ள சாரதா ஆட்டோ ஸ்டாண்டில் சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர். அனைவரும் தங்களது ஆட்டோக்களை சுத்தம் செய்து வாழை தோரனங்களால் அலங்கரித்து தங்களது குடும்பத்தினருடன் பூஜை செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி ரயில் நிலையம் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுற்றுலா கார், வேன் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் 16க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பூஜை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சங்கத் தலைவர் சகாயராஜ், செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ரமணன் உட்பட நிர்வாகிகள், ஓட்டுநர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்