தற்போது பருவ கால நிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே பெய்து வந்த மலை தற்போது பகலிலும் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கடைவீதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சமயத்தில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் அவதிக்கு உள்ளாக்கும் விதமாக பகலில் மழை பெய்து வருகிறது.

திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை, புத்தூர் நால்ரோடு மற்றும் வயலூர் சாலை ஆகிய பகுதிகளில் இன்று காலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழையில் நனைந்தபடியும் வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *