புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40) . இவர் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (07.11.2023 ) மாலை வழக்கம்போல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில், பிளாட்பாரம் இரண்டிற்கு வந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது ரயில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மஞ்சுநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் மஞ்சுநாத் உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்