திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த வாசுகி என்பவரின் மகன் வெங்கடேஷ் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும் கடந்த 19ஆம் தேதி மீன்பிடிக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு காரணமாக இன்று முகேஷ் , மகேஷ் தமிழ்மாறன், பிரேம் உள்பட நான்கு பேர் சேர்ந்து வெங்கடேஷை பூவாளூர் அரசு பள்ளி பின்புறம் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்த லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *