திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.51 கூவிபஜார் பகுதியில் திருச்சி (மேற்கு) சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையையும், வார்டு எண்.52 மேட்டுத்தெரு, துர்கை அம்மன் கோவில் தெரு, அந்தோணியார் கோவில் தெரு, செல்ல பெருமாள் கோவில் தெரு, பென்சனர் தெரு மற்றும் தெற்கு யாதவ தெரு ஆகிய 6 தெருக்களில், மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 15.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.52 பகவதி அம்மன் கோவில் தெரு. சவேரியார் கோவில் தெரு, கோரிமேடு தெரு மற்றும் அந்தோனியார் கோவில் தெரு ஆகிய 4 தெருக்களில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 9.90 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல் சமது, நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர் செல்வராஜ் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.