திருச்சி கீழ ஆண்டார் தெரு பகுதியில் ஈகில் சதீஷ் பண்டு என்ற பெயரில் சீட்டு நடத்தி வருபவர் சதீஷ். இவர் மலைக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரிடம் வாரம் தோறும் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்து தீபாவளி சீட்டு பிடித்துள்ளார் இவ்வாறு அவர் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது சீட்டு முடிந்து விட்டாலும் அவர் பணம் தராமல் இழுத்து அடித்து வந்துள்ளார் .

பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை. மேலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது தீபாவளி நெருங்கும் நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக நினைத்து பொதுமக்கள் அவரை உடனே கண்டுபிடித்து தங்களை தங்களின் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இந்த சம்பவத்தால் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *