44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்க‌ வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று காலை விழிப்புணர்வு செஸ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *