தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டால் 3000, கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வேண்டும். தாலுகா அளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வருடம் முழுவதும் செயல்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூட்டைக்கு 50 ரூபாய் கமிஷன் வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலர் சாகுபடியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் ஆறு மாத கடனை ஒரு வருட கடனாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணியினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்மணிகளை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *