திருச்சி,தென்னூர் சிவன் கோவில் அருகே உள்ள அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு முன் 60-க்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து ஒன்று சாலையில் பாதாள சாக்கடை‌ அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டு சரியாக மூடப்படாத பள்ளத்தில் பேருந்தின் பின் சக்கரம் மாட்டிக் கொண்டு சாய்ந்த நிலையில் சாலையின் நடுவே அபாயகரமாக நின்றது.

மேலும் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும், பயணிகள் மற்றும் பொது மக்களின் உதவியால் பேருந்து சாய்ந்துவிடாமல் சிறிது நேரத்திற்கு பிறகு நிலைநிறுத்தப்பட்டு பள்ளத்தில் இருந்து வெளியே வந்தது..

மேலும் மழைக்காலமாக இருப்பதாலும், பள்ளத்தின் அருகே நடுநிலைப்பள்ளி இருப்பதாலும் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி உடனடியாக சரிசெய்து கொடுத்திட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *