திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு உறுதிமொழி வாசித்து பின்னர் வண்ண பலூன்களை பறக்கவிட்டு பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணி மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட மருத்துவமனை நுழைவாயில் வழியாக சென்று அரசு மருத்துவமனையின் பழைய நுழைவாயில் வழியாக மருத்துவமனை வந்தடைந்தது. பேரணியில் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த பேரணியில் அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் நேரு மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்லூர் முதல்வர் நேரு கூறுகையில்;- “க்ளோஸ் த கேப்” என்ற தலைப்பின் கீழ் இந்த விழிப்புணர்வு நடைபெறுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு தடையாக உள்ள இடைவெளிகளை கலைந்து முழுமை அடைய செய்வதற்காக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7லட்சம் பேர் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100% புற்றுநோயிலிருந்து விடுபடலாம். புற்றுநோய் குறித்த அறிகுறிகளை பொதுவாக யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாததால் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த புற்றுநோய் குறித்த அறிகுறிகளுக்கான அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருந்தால் புற்றுநோயை தடுக்க ஒரு சிறந்த வழியாக அமையும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மருத்துவமனை கல்லூரி பேராசிரியர் சுரேஷ்

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அதிக அளவில் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் சிறுங்குடல் புற்று நோய்கள் அதிகமாக வருகிறது. திருச்சி மாவட்டத்திற்கு ஒரு சதவீதம் மட்டுமே பாதிப்பு உள்ளது.இதனை விரைவில் கண்டறிந்து குணப்படுத்தலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *