திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மனைவி காமாட்சி இவர்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது மருமகளின் ஐந்து பவுன் தங்க செயினை தனது கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார். மீண்டும் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பஸ்ஸில் வந்து இறங்கியபோது அருகில் இருந்த காமாட்சியின் உறவுக்கார பெண் காமாட்சியிடம் உங்கள் கழுத்தில் அணிந்து இருந்த ஐந்து பவுன் நகை எங்கே என்று கேட்டுள்ளார்.

 தனது கழுத்தில் இருந்து ஐந்து பவுன் தங்க செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் முழுவதும் தேடிப் பார்த்து எங்கும் கிடைக்கவில்லை உடனடியாக இது குறித்து தனது மகன் பொன்ராஜிடம் தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் பொன்ராஜ் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தனது தாய் கழுத்தில் அணிந்து இருந்த ஐந்து பவுன் செயின் திருடு போனது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஐந்து பவுன் தங்க செயினை திருடிய மர்ம நபர்கள் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *