திருச்சி தில்லை நகர் 7-வது குறுக்குத்தெருவில் மாநகராட்சி வணிக வளாக தரைத்தளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவகம் இன்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது நடைமுறையிலுள்ள 1ம் எண் இணை சார்பதிவகத்தில் இருந்து 1. செங்குளம் 2.வார்டு AD 3.வரகனேரி 4.வார்டு u 5,வார்டு V6.வார்டு O (H) 7.வார்டு | (w) ஆகிய 7 கிராமங்களை பிரித்தும் மற்றும் உறையூர் சார்பதிவகத்திலிருந்து தற்போது நடைமுறையிலுள்ள 1.வார்டு K (புத்தூர் வடக்கு) 2.வார்டுz(புத்தூர் தெற்கு) 3.வார்டு E(புதிய வார்டு Y) 4.வார்டு D (புதிய வார்டு M) 5. தாமலவருபயம் (புதியவார்டு H) 6.புத்தூர் 7,வார்டு B (வார்டு G) 8. வார்டு c (வார்டு 1) 9, வார்டு | 10,வார்டு J (உய்யக்கொண்டான் திருமலை) 11. பாண்டமங்கலம் ஆகிய 11 கிராமங்களை பிரித்தும் ஆகக்கூடுதல் 18 கிராமங்களை உள்ளடக்கியதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தில்லைநகர் சார்பதிவகம் அமையப்பெற்றுள்ளது.

திறப்பு விழாவிற்கு பின்னர் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்.., திருச்சி தில்லைநகர் பகுதியில் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாகவும், போக்குவரத்து வசதி மிகுந்த நகரின்மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. பதிவுத்துறை பொறுத்தவரை கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு எட்டாயிரம் கோடி கூடுதலாக கொடுத்துள்ளனர் 26 ஆயிரம் கோடி அரசு நிர்ணயித்துள்ளது வருவாயை கூட்டுவதற்கான முயற்சியில் உள்ளோம். உடைத்தரகர்கள் ஆவண எழுத்தர்கள் அவர்கள் இடத்தைத் தவிர மற்ற இடங்களுக்கு வரக்கூடாது என கூறுவது வதந்திகளை தவிர்ப்பதற்காக தான். தவறாக பதிவுகள் செய்யப்பட்டு ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அது ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.இந்த திறப்பு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *