திருச்சி மாநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை மாநகராட்சியை கண்டித்து ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் பகுதிக்குழு செயலாளர் பார்வதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் ராமராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்குவாசல் கோபுரத்தின் ஒரு பகுதி 6 மாதத்திற்கு முன்பு சேதம் அடைந்தது, கோபுரத்தை சீரமைத்து மீண்டும் திறக்காததால் 1 கி.மீ தூரத்திற்கு பக்தர்கள் கோவிலை சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக கோபுரத்தை சீரமைத்து திறக்கக் கோரியும், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டிற்காக மீன் மார்க்கெட் அருகே ஷெட் அமைத்தும் மாற்றாமல் அந்த இடத்திலேயே செயல்படும் காரணம் என்ன? போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள பூ மார்க்கெட்டை மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்