திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மெயின்கார்டு கேட் அருகே உள்ளது. இந்த தெப்ப குளத்தை சுற்றி ஏராளமான வணிக வளாகங்கள் கடைகள் உள்ளன. மாநகரின் முக்கிய பகுதியான இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தெப்பகுளத்தில் குப்பை கழிவுகள் குவிந்தும், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து செத்த மீன்களை அப்புறப்படுத்தினர். ஆனால் மீண்டும் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் செத்துமடிகின்றன. இதற்கு காரணம் தண்ணீரில் விஷத்தன்மை உள்ளதா (அல்லது) யாரோனும் விஷம் கலக்குகிறார்களா? என்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து குளத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்