Month: December 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி – ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிராத்தனை:-

கிறிஸ்துமஸ் தின பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு . கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக இன்று நள்ளிரவு முதல்…

*தமிழ் முழக்கம்* சார்பாக அனைவருக்கும் இனிய *கிறிஸ்மஸ்* தின நல்வாழ்த்துக்கள்:-

இந்த உலகில் அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு கிறிஸ்து பிறந்த தினம் இன்று. இந்த நன்னாளில் நாம் அனைவரும் பிறரிடம் அன்பை விதைப்போம். அன்பால் இந்த உலகை ஆள்வோம்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்:-

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மறைந்த எம்ஜிஆரின் 37வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

மறைந்த தமிழகத்தின் முதல்வரும் ஸஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், பாரத் ரத்னா விருது பேற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது…

எம்ஜிஆரின் 37ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மறைந்த பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம். பேட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர்…

திருச்சி அரசங்குடி மேலத்தெரு பகுதி மக்களுக்கு பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு:-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா, அரசங்குடி கிராமம், மேலத்தெரு பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக விடுதலைக் கழகத்தின்…

போலி விதை நெல்லால் 300ஏக்கர் பயிர்கள் பாதிப்பு – நஷ்டஈடு வழங்ககோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு:-

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி மற்றும் வெங்கடாசலபுரம், வெள்ளனூர், புங்கை சங்கேந்தி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அம்மன் சோனா, தனுஷ்டா, அமோக் உள்ளிட்ட நெல் ரகங்கள் நடப்பட்டதாகவும்,…

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வான்கோழி பிரியாணி வழங்கிய ரஜினி ரசிகர்கள்:-

நடிகர் ரஜினி காந்த் பிறந்த நாள் விழா மற்றும் ரஜினிகாந்த் 50-ஆம் ஆண்டு திரைத்துறை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக திருச்சி செந்தண்ணீர் புரம் பகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி மனோகர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும்…

பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? – திருச்சியில் சீமான் பேட்டி:-

திருச்சியில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம், இஸ்லாமியர்களை எதிர்ப்பதை விட அவர்கள்…

திருச்சியில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் அடாவடி வசூல் செய்யும் மதுபான கடை ஊழியர் . மது பிரியர்கள் புலம்பல்:-

தமிழகத்தில் செயல்படும் அரசு மதுபான கடையில் போலி மது வகைகள் மற்றும் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க கியூ ஆர் கோடு பில்லிங் முறையை கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தது, அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 159 அரசு மதுபான…

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

இந்திய அரசியல் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மனிதநேய…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் முதியவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடினர்:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் மாணவர் நலத்துறை மற்றும் மனநல ஆலோசனை மையம் சார்பில் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள தூய தோமையர் கருணை முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி…

அமித்ஷாவை கண்டித்தும், ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், நேற்று பாராளுமன்ற போராட்டத்தின் போது பிஜேபி எம்.பி-ஐ ராகுல் காந்தி தாக்கியதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி…

திருச்சி ராயல் பேர்ல் மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சையின் மூலம் புதிய சாதனை:-

நம் இந்திய நாட்டிற்கும் நம் மாநிலத்திற்கும், பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற சாதனை நாயகனாக திகழும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையின் நிர்வாகி காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவராக வலம் வரும் டாக்டர் ஜானகிராம் அவர்கள் புதிய சாதனை…

டாக்டர் அம்பேத்கரை பாராளு மன்றத்தில் அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்:-

சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஆணைக்கிணங்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி…

திருச்சியில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து திமுக, மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் – ஊராட்சி மன்ற தலைவி விளக்கம்:-

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களை ஊராட்சி நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இன்றி அகற்றியதாக கூறி தி.மு.க, ம.தி.மு.கவினர் திருவாசி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான…