திருச்சி சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை செய்த வழக்கில் பிரபாகரன் தீபக் ஆகியோரை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான முன்னாள் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த கதிர்வேல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரவி முருகையா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிவக்குமாரின் உடலை வாங்க மறுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலெக்டர் சிவராசு மற்றும் டிஐஜி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

 இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த சிவக்குமாரின் உடலை அவரது மனைவி மைதிலி மற்றும் உறவினர்கள் நல்லடக்கம் செய்வதற்காக இன்று காலை அரசு மருத்துவமனையில் இருந்து இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *