மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்களை படுகொலை செய்து வயல்வெளியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் வசித்து வருபவர் மமதா வயது 45 இவரது மகள்களான ரூபாலி வயது 21 மற்றும் திவ்யா வயது 14 இவர்களின் உறவினர்களான இரு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே 13ம் தேதி முதல் இவர்கள் ஐவரும் மாயமானதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர் விசாரணையின்போது மாயமான இளம்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் சுரேந்திரா ராஜ்புத் என்ற இளைஞர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது உடனடியாக அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் சுரேந்திரா ராஜ்புத் என்ற இளைஞரும் ரூபாலியும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளைஞருக்கு வீட்டில் பெண் பார்ப்பதால் ரூபாலியை கைவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தார் சுரேந்திரா ராஜ்புத்தியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக தெரிவித்தனர். இதில் ஆத்திரமடைந்த சுரேந்திரா ராஜ்புத் மற்றும் அவனது நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து பெண்களையும் படுகொலை செய்தது. அவர்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக வயல்வெளியில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்து விட்டு ஆடைகளை தீயிட்டுக் கொளுத்தியதாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.இந்தக் கொலை சம்பந்தமாக தற்போது 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *