கர்நாடகா மாநிலம் மாண்டியா நகர் பகுதியில் உள்ள நியூ தமிழ் காலனியில் வசித்து வருபவர் நாகம்மா வயது 50. இவரது மகள் ரூபா வயது 30 இவர் ஹோம் கார்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபா ஏதோ சில காரணங்களுக்காக தன்னுடைய வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக ரூபாவுக்கு திருமணமாகியுள்ளது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரூபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த 5 வருடங்களாக தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் தாய் நாகம்மாவுக்கும், மகள் ரூபாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தாய் நாகம்மாவும், மகள் ரூபாவும் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. மேலும் இவர்களுடைய வீட்டிலிருந்து திடீரென துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் ரூபா சடலமாக கிடந்ததும், ரூபாவின் சடலத்துடன் 4 நாட்களாக தாய் நாகம்மா இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் ரூபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் ரூபாவின் மர்ம மரணம் குறித்து தாய் நாகம்மாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *