திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிகளிடம் மஞ்சம் பட்டியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 55 ) என்பவர் சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒரு மாணவி தன்னுடைய டிபன் பாக்சில் இருந்த சாப்பாட்டை இரக்கப்பட்டு கொடுத்துள்ளார்.

மீண்டும் வெற்றிவேல் அந்த டிபன் பாக்ஸை திருப்பி மாணவியிடம் கொடுத்த போது அதில் காதல் கடிதம் மற்றும் சாக்லேட் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மாணவி உங்கள் பிள்ளைகளிடம் இது போன்று கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு மாணவியின் கையை பிடித்து இழுத்ததோடு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பெற்றோரிடம் கூறவே இது தொடர்பாக மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *