திருச்சி உய்யக்கொண்டாள் திருமலை சண்முகா நகரில் கடந்த 2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டினார். மேலும் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சி மற்றும் கவுன்சிலர் நாகராஜன் ஆகியோரை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் சார்பில் இன்று புத்தூர் நான்கு ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சண்முகா நகர் நலச்சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;-

மாநகராட்சியால் அடிக்கல் நாட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கான ஒரு பூங்காவை பணிகள் தொடங்க முற்படும் போதெல்லாம் தனி நபர் ஒருவருக்கு ஆதரவாக கவுன்சிலர் நாகராஜன் திட்டப் பணிகளை தொடங்கவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அவருக்கு இந்த மாநகராட்சி நிர்வாகம், அரசாங்கம் எப்படி துணை போகிறது?. அரசு நிலத்தை அபகரிக்க துடிக்கும் தனி நபருக்கு இந்த மாநகராட்சி துணை புரிகிறதா ? இந்த பூங்காவுக்காக பலமுறை மாநகராட்சி மேயர் ஆணையர் உதவி ஆணையர் ஆகியோரிடம் வைத்தோம். எங்கள் நியாயமான கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்றாததால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டோம்.

ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இன்று போராட்டம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார். இதில் சண்முகா நகர் நலச்சங்க தலைவர் எஸ் பி வேலாயுதன், செயலாளர் பி. குமரன், பொருளாளர் எண் செந்தில்குமார் துணைத் தலைவர் ஆர் சிவக்குமார் இணை செயலாளர் பொன்ராஜ் எஸ் ஆதவன் ராஜா சிங்கம் மற்றும் சண்முகா நகர் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
