உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழுவில் நடுவராக தேர்ச்சி பெற்ற காளீசன் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடுவராக தேர்ச்சி பெற்ற காலீசன் இளஞ்செழியன் அவர்களுக்கு கராத்தே பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காளீசன் இளஞ்செழியன் கூறும்போது:

“கிரிக்கெட் போட்டிகளுக்கு அடுத்த படியாக இருக்கும் கராத்தே போட்டிக்கு சிலம்ப வீரர்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு போன்று கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் கராத்தே பயிற்சிக்கு நிரந்தர உள் விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும்.

 மேலும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரோக்கியமும் தைரியமும் பெற தற்காப்பு கலையான கராத்தேயை கற்றுத்தர முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து ஆண்டு முழுவதும் கற்றுத்தர வேண்டும்” கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்