Author: JB

திருச்சியில் மீன் மார்க்கெட் மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி.

திருச்சியில் இன்று கொரோனா நிலவரம்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 8552 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 396 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

ஊரடங்கில் ஆம்புலன்ஸ்களை அலைக்கழிக்க விடும் காவல்துறை.

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்றை கட்டுப் படுத்துவதற்காக தமிழக அரசு 15 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மே 10-ம் தேதி முதல் அமல்படுத்தியது. அதிலும் கடந்த 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே இ பதிவு…

11 நாட்களுக்கு திருச்சியில் மீன் மார்க்கெட் கிடையாது.

திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.கொரோனாவின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் நமது உயிர் விலை மதிப்பற்றது ஆகையால் வியாபாரம் ஒன்றே நம் நோக்கமல்ல . நமக்கும்…

மநீம கட்சியில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைத் தூக்கி விட்டது – முருகானந்தம் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும்,ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது.ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது.…

தகனம் செய்யும் பணியாளர்களுக்கு மரியாதை செய்த எம்எல்ஏ

திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஓயாமாரி சுடுகாடு மற்றும் தகன மேடையை ஆய்வு செய்து பார்வையிட்டார்.மேலும் இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் இங்கு சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கே.என்.நேரு ஆய்வு.

திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன . ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பாக…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலஸ்தினயர்களை வெளியேற்றுவதை கண்டித்தும் மஜ்ஜித் அக்ஸாவை அழிக்க முற்படும் இஸ்ரேல் நாட்டை கண்டித்து இந்திய யூனியன்முஸ்லிம் லீக் திருச்சி மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகே மாநில துணை செயலாளர் பாருக்தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஊர் அடங்காதவர்களின் வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு , அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு , ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது . இருப்பினும் ,…

அரசு மருத்துவ மனையில் அமைச்சர் கே என் நேரு திடீர் ஆய்வு.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன நிலையில்,திருச்சியில் நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றால் பாதிக்கபடுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அவர்கள் அரசு மருத்துவமனையில்…

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த்.கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த். சட்டசபை தேர்தலிலும் கூட சுற்றுப் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த்,…

அதிகக் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை.

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தற்போது திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இறப்பு விகிதத்தை குறைப்பது தான் முதல் பணியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம் மேலும் தினமும் 6…

ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.

ஊரடங்கினால் ரத்து, பொதுமக்கள் ஏமாற்றம்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல்…

திருச்சியில் இன்று 1271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 8164 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1271 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 877 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

ஊரடங்கில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய இளைஞர்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி…