தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சருமான .அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூர் தொகுதி பொன்மலை பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்.

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு தொடர்பான விதிமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும். முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்போம். சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும். சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளிகள் நவம்பரில் தான் திறக்கப்பட்ட நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த ஆண்டு எப்பொழுதும் போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும்.

 திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை விளை நிலங்களில் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் பட்சத்தில் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பர் 19ஆம் தேதி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தினம் அன்று சென்னையில் உள்ள பள்ளியில் நிகழ்வு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளோம். ஏற்கனவே அரசு பள்ளிகளில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். இருந்தாலும் கோவையில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வு காரணமாக நவம்பர் 19ஆம் தேதி இதை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

பாடத்திட்டங்கள் என சொல்வதை காட்டிலும் முதல் நாள் பள்ளி தொடங்கும்போதே மாணவர்களுக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். மழை காரணமாக பல்வேறு அரசு பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே பள்ளிகளின் நிலை குறித்து கேட்டுள்ளதாகவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்த ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அதற்கேற்றார் போல் பள்ளிகளில் உரிய வசதி மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் இதுபோன்று நடைபெற்றாலும் தடுப்பது குறித்தும் நடவடிக்கை குறித்தும் எத்தனை மாணவர்களாக இருந்தாலும் அரசு பள்ளிக்கு வந்தால் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ஷேக்முஜிப் மற்றும் மாநகராட்சி இணை ஆணையர் உதவி செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 27-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரில் சென்று பெற்றுக் கொண்டார். 

அமைச்சரிடம் செந்தணீர்புரம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி 27-வது வார்டுக்குட்பட்ட செந்தணீர்புரம் பகுதியில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரியும், திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் இப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரியும், செந்தநீர்புரம் சர்வீஸ் சாலையில் வேகத்தடை அமைக்க கோரியும், குப்பை வண்டிகளை அதிகப்படுத்தி தரக் கோரியும், முத்துமணி டவுன் பஸ் ஸ்டாப் வரை பஸ்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்த தரக்கோரியும், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் சிந்தனை புரம் பொதுமக்கள் கோரிக்கை மனுவாக அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *