Latest News

தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு:- “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் – அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு:- டிராக்டர் எடுத்துக் கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி நூதன பண மோசடி – பாதிக்கப் பட்டவர்கள் எஸ்பியிடம் புகார்:- 8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வலியுறுத்தி. எஸ்.ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்:- ஆவின் மூலம் பால் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலை ஊற்றி போராட்டம்.

தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் – வைகோ பேட்டி.

திருச்சியில் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக கழகம் ஊக்கம் வடிவம் கொண்டு வளர்ந்து வருகிறது, அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இது வரை இல்லாத…

சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து. விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சி் ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் திருச்சியில் இருந்து சி. ஆர். பாளையம் செல்வதற்காக தனது லாரியில் கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் திடீரென லாரி…

பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் – த.ஆ.மு.ச கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்பு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய…

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஒருங்கி ணைந்த புதிய அலுவலக கட்டிடம் – காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக…

ஸ்ரீரங்கம் வார்டு எண் 3-ல் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை திருச்சி மாநகராட்சி மேயர்…

தமிழகத்தில் ஒரேநாளில் 86 பேருக்கு கொரோனா – ஒருவர் பலி.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 40 ஆண்களும், 46 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 26 பேரும் சென்னையில்…

முன்னாள் எம்.பி அடைக்கல ராஜின் 87வது பிறந்தநாள் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் திருச்சியில் நான்கு முறை எம்பி ஆக இருந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அடைக்கலராஜ் அவர்களின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது இதை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்தில் உள்ள…

இசைத் துறையில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேர்க்கை பெறுவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம்.

தமிழக திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி வேர் ஹவுஸ் குட்செட் சாலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அயலக அணி மாவட்ட…

ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக் கோரி ClTU ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்டம் ClTU ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். மாவட்ட…

திருச்சியில் இடி தாக்கியதில் மின்சாரம் துண்டிப்பு – 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவிக்கள் பழுது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாநில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் சில நாட்களாக பரவலாக ஒவ்வொரு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திருச்சியில் ஒரு சில இடங்களில் பரவலாகவும்…

எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வழங்காமல் மறுத்துள்ளார். அதனை கண்டித்து இந்தியா முழுவதும் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டும்…

கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கல்மந்தை ஊர் பொதுமக்களும் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்…

மறைந்த அன்பில் பொய்யா மொழியின் 69வது பிறந்தநாள் – அவரது படத்திற்கு அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை.

முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில்…

திருச்சியில் 6-லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்திய 4 பேர் கைது, 3-கார்கள் பறிமுதல்.

பெங்களூரிலிருந்து திருச்சி சமயபுரம் பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட பொருளாதர குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் (லால்குடி பொறுப்பு) சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர்…

தற்போதைய செய்திகள்