கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்தம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனா பயம் காரணமாக மக்கள் யாரும் உதவ முன் வருவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் கொரோனா அவசரகால இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்களாக முன்வந்து ரத்த தானம் வழங்கினர்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் வேளையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இந்நிலையில் திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் , ஆதரவின்றி தவிக்கும் ஏழை , எளியோருக்கு உதவி வருகிறது . அந்த வகையில் திருச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொரோனா தடுப்பு ஆலோசனை சேவை மையம் இயங்கி வருகிறது . மேலும் வராகநேரி அருகே ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது . கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அவசர ஊர்தி ஒன்று தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *