Latest News

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்:- காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய டேக்வாண்டோ மாணவர்கள்:- மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:- திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:-

டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற செல்ல பிராணிகளின் அணிவகுப்பை கண்டு ரசித்த பொதுமக்கள்:-.

திருச்சியில் டெல்டா கென்னல் கிளப் சார்பில் தேசிய அளவிலான முதலாவது நாய்கள் கண்காட்சி இன்று காஜாமலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 40 வகைகளை சார்ந்த 154 நாய்கள் கலந்துகொண்டன.…

திருச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்காத மாநகராட்சியை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:- .

அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை கொல்வதை தடுத்திட வேண்டும், வார்டுகள்தோறும் தரமற்ற…

திருச்சியில் நடந்த ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரெக்ஸ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்:-

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தேவர் ஹாலில் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட ஆணழகன் சங்கம் இணைந்து “மிஸ்டர் ஆணழகன் போட்டி இன்று நடைபெற்றது.…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அமமுக சார்பில் வருகிற 28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிப்பு:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகராட்சியின் அலட்சியப் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் வழங்கப்படும் சுகாதாரமற்ற…

திருச்சி 10வது வார்டு பகுதியில் குடிநீரில் எந்த பிரச்சினையும் இல்லை மக்கள் அச்சமின்றி குடிநீரை பருகலாம் – அமைச்சர் கே.என்.நேரு:-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு மின்னப்பன் தெரு பகுதிகளில் கடந்த வாரம் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அங்கு…

புனித மரியன்னை பேராலயம் சார்பில் மறைந்த போப் பிரான்சிஸ்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

உடல் நலக்குறைவு காரணமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிறிஸ்தவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது மறைவையொட்டி…

அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் கோவிலின் 49 வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 22ஆம் தேதி இந்திரா நகர் தலைவர் தர்மகர்த்தா…

காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான…

ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது:-

திருச்சி கீழ ஆண்டாள் வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ சித்துக்கண் மாரியம்மன் ஆலயத்தின் 60வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி கணபதி ஹோமம் உடன் தொடங்கி, 14 14ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி இருபதாம்…

துணை ஜனாதிபதியை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:-

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துணை ஜனாதிபதி மற்றும் பாஜக எம்.பிக்கள் ஆகியோரை கண்டித்தும் ஜனநாயக பூர்வமான நீதித்துறையை பாதுகாக்க கோரியும் திருச்சி நீதிமன்றம் முன் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் ஒற்றுமை மேடை சார்பில் இன்று கண்டன…

அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் பொது மக்களுக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் நீர்மோர், தர்பூசணி வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்…

ரயில்வே மேம்பால பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் – திருச்சியில் எம்பி துரைவைகோ பேட்டி:-

திருச்சியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கு பெற்ற ரயில்வே குறைபாடுகள், பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது‌ இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி நாடாளுமன்ற…

திருச்சியில் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் பரிதாபமாக 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை 120 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாந்தி…

வீட்டிற்கு தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் புகார்:-

திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி என்பவர் இன்று காலை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவர்…

திருவெறும்பூர் வேங்கூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு பா.ஜ.க. இந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்தனர்:-

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வசந்தா உள்ளிட்ட பொதுமக்கள் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- நாங்கள் மேற்கண்ட…

தற்போதைய செய்திகள்