ஜனவரி 26 வரை பள்ளி கல்லூரிகளை மூடவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கோவா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிவரை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 26 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோவாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே அம்மாநில அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *