உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20, 4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ல் நடைபெறும். ஜனவரி 15 வரை அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான பேரணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல்கட்ட தேர்தல், மார்ச் 3ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தல் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, ஜனவரி 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல், ஜனவரி 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல் கடைசி நாள், ஜனவரி 24ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜனவரி 27ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெறுதல் அதன்பின் இறுதியாக வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி முடிவடையும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *