தாம்பரம் தனியார் மண்டபத்தில் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் சேலையூரில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறை மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பரங்கிமலை சரக துணை ஆணையாளர் டாக்டர் பிரபாகர் கலந்து கொண்டு 2000 பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா தசரதன், வட்டார தலைவர் சண்முகநாத் மற்றும் ரவிகுமார், அன்னை அரவணைப்பு கல்வி குழுமத்தின் மேனேஜிங் டிரஸ்டி எம்.தேவி மணி மற்றும் அகரம், அரிமாசங்கம், சேலையூர் மத்திய அரிமா சங்கம் எஸ்.எஸ்.எம் நகர் அருமா சங்கம் மற்றும் அன்னை அரவனைப்பு கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.