திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆடி வெள்ளிக் கிழமையிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பெரும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அதிகாலை முதலே வந்து வணங்கி வருகின்றனர் – மஞ்சள் குங்குமங்களை பெண்கள் ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்வது, அன்னதானம் வழங்கி மகிழ்வது போன்ற செயல்களால் ஆலயம் கலை கட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *