திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் 7 மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும் , மருந்து சரக்கு குற்றவாளிகள் 11 நபர்கள் மீதும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 நபர்கள் மீதும் , இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 நபர்கள் மீதும் , பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் 1 மீதும் , கள்ளசந்தையில் ரேசன் அரிசியை கடத்தியதாக 1 மீதும் ஆக திருச்சி மாநகரத்தில் இந்த ஆண்டு இதுவரையில் மொத்தம் 101 நபர்கள் அதிரடியாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆணையிட்டுள்ளார்கள் . திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட , நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது . திருச்சி மாநகரத்தில் , சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும் , சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் , கெட்டநடத்தைக்காரர்கள் , வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து , அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *