திருச்சி மண்ணச்சநல்லுார் பங்குனி பாலம் அருகே உள்ள கருப்பு கோயிலில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது , இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக அத்தாணி கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகளான மாரிமுத்து, அரவண் ஆகியோர் கோவிலுக்கு நடந்து வந்த போது எதிர்பாராத விதமாக தெருவில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மாரிமுத்து மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்தார். இதனை கண்ட அரவண், மாரிமுத்தை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிந்து வந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின்வாரியத்துறைக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர் மேலும் இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன் தம்பி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *